அறத்துப்பால் -இல்லறவியல் - பயனில சொல்லாமை

 

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பரிமேலழகர் உரை.

 

பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
விளக்கம்:
(பண்பு: இனிமையும் மெய்யும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

Translation

Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.

Explanation

The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.