அறத்துப்பால் -இல்லறவியல் - பயனில சொல்லாமை
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்
பரிமேலழகர் உரை
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)
Translation
Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!
Explaination
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.